அத்தியாயம் 9

அன்றிரவு…

பாண்டியன் மாளிகை முழுவதும் அமைதியில் மூழ்கியிருந்தது.

தன் அறையில் ஜன்னல் அருகே நின்று நிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லி.

மறுநாள்…

தன் வாழ்க்கை முழுவதும் மாறப்போகிறது என்ற எண்ணமே அவளுக்குள் ஒரு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்தியது.

அப்போது…

கதவை மெதுவாகத் தட்டும் சத்தம் கேட்டது.

அல்லி திரும்பிப் பார்த்தாள்.

கதவைத் திறக்காமலே வெளியில் இருந்து ஆதவனின் குரல் கேட்டது.

“கதவைத் திற.”

நடுங்கும் கைகளால் கதவைத் திறந்தாள்.

வாசலில் நின்றிருந்தான் ஆதவன்.

அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அமைதியாக அறைக்குள் வந்தவன், கதவை மூடிவிட்டு அல்லியை நேராகப் பார்த்தான்.

“நாளைக்கு என்னோட சென்னை வர்ற.”

அல்லி மெதுவாகத் தலையசைத்தாள்.

“ஆனா…”

என்று ஆரம்பித்தவன், சில நொடிகள் அவளை உற்றுப் பார்த்தான்.

“அங்க போனதும் இந்த வீட்டுல இருந்த மாதிரி நடந்துக்கக்கூடாது.”

அல்லி புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“நான் சொல்றத மட்டும் செய்.”

“தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாத.”

“என் அறைக்குள்ள என் அனுமதி இல்லாம வரக்கூடாது.”

“மிக முக்கியமா…”

அவன் குரல் இன்னும் குளிர்ந்தது.

“என் மனைவிங்கிற உரிமையை எடுத்துக்க நினைக்காத.”

அந்த வார்த்தை அல்லியின் இதயத்தை குத்தியது.

கண்கள் கலங்கின.

ஆனால்…

அவள் எதுவும் பேசவில்லை.

ஆதவன் திரும்பி கதவை நோக்கி நடந்தான்.

வாசலருகே நின்று மீண்டும் சொன்னான்.

“உலகத்துக்காக மட்டும் நீ என் மனைவி.”

“அதை மறந்துடாத.”

அவன் வெளியேறியதும்…

அல்லியின் கண்களில் இருந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டு விழுந்தது.

“நான்… எப்போதாவது உங்ககிட்ட எதாவது கேட்டேனா…”

என்று தனக்குத்தானே மெதுவாகக் கேட்டுக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

மறுநாள்…

சென்னை…

கார் மெதுவாக இரும்புக் கதவைத் தாண்டி உள்ளே நுழைந்தது.

அல்லி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறே இருந்தாள்.

அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அது ஒரு சாதாரண வீடு இல்லை…

அரண்மனை போல பிரம்மாண்டமாக நின்ற மாளிகை.

வீட்டைச் சுற்றி வண்ணமயமான மலர்த் தோட்டங்கள்…

நடுவில் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்ட நீரூற்று…

இருபுறமும் உயரமாக நின்ற தென்னை, பனை மரங்கள்…

வாசலில் வரிசையாக நின்ற பாதுகாப்பு வீரர்கள்…

கார் நின்றதும், இரண்டு வேலைக்காரர்கள் ஓடி வந்து கதவைத் திறந்தனர்.

“வணக்கம் ஐயா…”

என்று மரியாதையுடன் தலை குனிந்தனர்.

அல்லி காரிலிருந்து இறங்கியவுடன் அந்த மாளிகையை முழுவதுமாகப் பார்த்தாள்.

“இவ்வளவு பெரிய வீட்டில்… இனிமேல் நானா வாழப் போறேன்?”

என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது.

அவள் முகத்தில் தெரிந்த பயத்தைப் பார்த்தும் ஆதவன் எதுவும் பேசவில்லை.

மெதுவாக அவள் அருகில் வந்து நின்றவன், குளிர்ந்த குரலில் சொன்னான்.

“இது என் வீடு.”

“இந்த வீட்டில் என் வார்த்தையைத் தவிர வேறு எந்தச் சத்தமும் ஒலிக்கக் கூடாது.”

அல்லி அமைதியாக அவனைப் பார்த்தாள்.

“இங்கே எல்லாரும் நான் சொல்றதைத்தான் கேட்பாங்க.”

“நீயும் அதுக்கு விதிவிலக்கு இல்லை.”

அவன் இன்னும் ஒரு அடி நெருங்கினான்.

“இந்த அரண்மனையில் அரசன் நான் மட்டும் தான்.”

“நான் சொல்றதுதான் சட்டம்.”

“அந்த சட்டத்தை மீற நினைச்சா…”

ஒரு நொடி நிறுத்தி, அவள் கண்களை நேராகப் பார்த்தான்.

“அதுக்கான விளைவுகளையும் நீயே சந்திக்கணும்.”

அல்லியின் விரல்கள் நடுங்கின.

அவள் மெதுவாகத் தலையைக் குனிந்தாள்.

ஆதவன் திரும்பிப் பார்க்காமலே மாளிகைக்குள் நடந்தான்.

அவனுக்குப் பின்னால்…

பயமும், தெரியாத எதிர்காலமும் மனதில் நிரம்பியபடி…

அமைதியாக நடந்தாள் அல்லி.

மாலை…

ஆதவன் தனது அறையிலிருந்து வெளியே வந்தான்.

அவனது கையில் ஒரு பெரிய பெட்டி இருந்தது.

அதை அல்லியிடம் நீட்டினான்.

“இதுல ஒரு புடவையும், நகையும் இருக்கு.”

அல்லி அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

“இன்னைக்கு இரவு ஒரு விருந்து.”

“அதை கட்டிக்கிட்டு வா.”

அல்லி மெதுவாக,

“என்னோட புடவையிலேயே…”

என்று சொல்ல ஆரம்பிக்க…

ஆதவன் அவளை நிறுத்தினான்.

“அந்த நடுத்தரக் குடும்பப் புடவையைக் கட்டிக்கிட்டு வந்தா…”

“அங்க என் மரியாதை போயிடும்.”

“அதனாலதான் இதை வாங்கினேன்.”

அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அல்லியின் மனதை காயப்படுத்தியது.

“இது உனக்காக வாங்கல.”

“என் கௌரவத்துக்காக.”

அவ்வளவு சொல்லிவிட்டு திரும்பிச் சென்றான்.

அல்லி அந்தப் பெட்டியை கையில் பிடித்தபடியே நின்றாள்.

அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் தேங்கியது.

சிறிது நேரம் கழித்து…

அந்த அறையின் கதவு மெதுவாகத் திறந்தது.

அடர் மரூன் நிற பட்டுப் புடவையில்…

அளவான நகைகளுடன்…

நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டுடன்…

மெல்ல வெளியே வந்தாள் அல்லி.

அவளது எளிமையே…

அவளது அழகாக மாறியிருந்தது.

படிக்கட்டில் இறங்கி வந்த அவளைப் பார்த்த வேலைக்காரர்கள் கூட ஒரு நொடி பிரமித்துப் போனார்கள்.

அந்த நேரத்தில்…

கோட்டை அணிந்தபடி வெளியே வந்த ஆதவனின் பார்வையும்…

ஒரே ஒரு நொடி அல்லியின் மீது நிலைத்தது.

அடுத்த நொடியே…

அவன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“நேரமாச்சு.”

“கிளம்பலாம்.”

அவ்வளவுதான்.

அவன் காரை நோக்கி நடந்தான்.

அல்லி அமைதியாக அவனைப் பின்தொடர்ந்தாள்.

இருவரையும் ஏற்றிக்கொண்டு…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top