அத்தியாயம் 9

அன்று விக்ரமின் பின்னாடியே கைகளை பிசைந்து கொண்டு திரிந்து கொண்டிருந்தாள் நறுமுகை…

 

அவன் கூறிய வேலைகளை எல்லாம் புயல் வேகத்தில் செய்தாலும் அவனிடம் எப்படி கேட்பது? எவ்வாறு கேட்பது? என்கிற தயக்கத்துடன் சுற்றி வந்து கொண்டிருந்தாள்…

 

லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவனை பார்த்தவாறு மெல்ல அவன் அருகே வந்த நின்றவள் எப்படி கேட்பது என தயக்கத்துடன் நின்றிருக்க ..லேப்டாப்பில் பார்வை பதித்திருந்தவன் கடை கண்ணால் கைகளை பிசைந்தவாரு நின்றிருந்தவளை கண்டவன்,

 

” என்ன விஷயம்..?”  என அழுத்தமாய் கேட்டதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்த நறுமுகைக்கு அப்பாடா என்றானது.. அவனே பேச்சினை ஆரம்பித்து வைத்திருந்தமையால் ..

 

“அ…அது.. சார்.. இன்னிக்கு சீக்கிரம் ..வீட்டுக்கு போகணும்..”  என்றதும் புருவங்கள் இடுங்க அவளை தலை திருப்பி பார்த்த விக்ரம் ,

 

“எதுக்கு..?”

 

” அது ..என் சொந்தக்காரங்க ஃபங்ஷனுக்கு போகணும் சார்…” என்றதும் சலிப்பாக அவளை  பார்த்துவிட்டு லேப்டாப்பில் பார்வை பதித்தவன் ,

 

“பங்க்ஷன் ரொம்ப முக்கியமா நறுமுகை …..இங்க வேலை அவ்வளவு இருக்கு.. நீங்க அதெல்லாம் விட்டுட்டு ஃபங்ஷன் போகணும்னு சொல்றீங்க..?”  என அடிக்குரலில் சீறியவனை எச்சில் விழுங்கி கொண்டு பார்த்த நறுமுகைக்கு விட்டால் அழுகையே வந்துவிடும் போல,

 

” சா..சார் ..ப்..ப்ளீஸ்.. சார்.. கண்டிப்பா ஃபங்ஷன் போயே ஆகணும்.. சார் ..என்னோட சித்தப்பா பையனுக்கு கல்யாணம் சார் …ப்ளீஸ் சார்..”  என இல்லாத சித்தப்பாவினை விக்ரமிற்காக இருப்பதாக பொய் கூறியவளை அமர்த்தலாக பார்த்த விக்ரம் மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு,

 

” இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டீங்களா..??? கடைசி நிமிஷத்துல தான் வந்து சொல்லுவிங்களா நறுமுகை..?”  என அவன் முகம் இயல்பாக இருந்தாலும் குரலில் அவ்வளவு கோபம் தேங்கி இருந்தது.. அவளுக்கோ ஐயோடா என்றானது…

“ம்ம்ம்…எனக்கே இன்னிக்கி காலைல தான் சொன்னாங்க..”  என வாய் விட்டதும் அவளை முகம் சுருக்கி பார்த்தவன்,

 

“வாட்..?? காலையில தான் சொன்னாங்களா..??  நெஜமாவே உங்க சித்தப்பா பையனுக்கு கல்யாணமா..? இல்ல பொய் சொல்லிட்டு வேற ஏதாவது எங்கேயாவது போற ஐடியா இருக்கா..?”  என சற்று காட்டமாக கேட்டதும் நறுமுகை அவனை நிமிர்ந்து பார்த்து,

 

” அது சித்தப்பாக்கும் அப்பாவுக்கும் கொஞ்சம் ஃபேமிலி பிரச்சனை.. போக கூடாதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. இன்னைக்கு மார்னிங் தான் கண்டிப்பா கல்யாணத்துக்கு போய் ஆகணும்னு சொல்லிட்டாங்க சார் ..அத தான் சொல்ல வந்தேன்..” என ஒருவழியாய் திரித்து கூறிவிட்டாள்… 

 

அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன்,

 

“ம்ம்ம்… என்னவோ சொல்றீங்க வேலையெல்லாம் முடிச்சிட்டீங்களா..?” பலமாக தலையை ஆட்டியவள்,

” முடிச்சிட்டேன் சார் ..நீங்க சொன்ன எல்லாமே முடிச்சிட்டேன்..

இலையெல்லாம் நல்லா காஞ்சிருச்சு சார் …நீங்க சொன்ன மாதிரி அது நல்லா பொடி பண்ணி எத்தனால்  ஊத்தி வச்சிட்டேன்… நீங்க சொன்ன மெத்தட்ல சாரும் எடுத்து வச்சுட்டேன் .. ஃப்ரிட்ஜ்லையும் ஸ்டோர் பண்ணி வச்சுட்டேன்… ” என்றவளை சிறு தலையசைப்புடன் பார்த்தவன்,

 

“வெவரமா தான் இருக்கீங்க…காரியம் ஆகனும்னா டக்கு டக்குனு வேலை ஆகுது… சரி கிளம்புங்க நாளைக்கு வருவீங்களா மாட்டீங்களா..?”  என கேட்டதும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள்,

 

” அது கல்யாணம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வந்துடுறேன் சார் ..” என்றவளை மார்க்கமாக பார்த்து வைத்தவன் சரியென தன் வேலையை பார்க்கலானான்… 

 

விட்டால் போதும் என்று லேபில் இருந்து தன் பையை எடுத்துக் கொண்டவள் கிளம்பும் சமயம் கவிதாவை தான் தேடினாள்.. கவிதாவும் ட்ரேயில் சில பல பொருட்களை வைத்துக்கொண்டு படியேறி வந்தவள் நறுமுகையே பார்த்ததும் இரு புருவங்களை உயர்த்தி என்னவென கேட்டாள்…

 

அவளை நெருங்கி சென்ற நறுமுகை,

 

“ வீட்டுக்கு கிளம்புறேன் கவிதா..”

 

” விட்டுட்டாரா..?? சரி சரிடி… பார்த்து போ.. என்ன ஏதுன்னு போன் பண்ணி சொல்லு..” என்றதும்,

“சரிடி.. வரேன் யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காத…”

 

”  சரி சரி சொல்லல..”  என கவிதாவிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி சென்றாள் நறுமுகை…

 

 

ஆடி அசைந்து வந்த மகளை பரபரப்பாக நோக்கிய சுரதை,

 

” சீக்கிரம் வா.. சமைச்சு வச்சிருக்கேன் சீக்கிரம் சாப்பிடு ரெடி ஆகணும் இல்ல ..?” என்றதும் பையினை தூக்கி சோஃபாவில் போட்டபடி அன்னையை முறைத்து வைத்தவள்,

 

” வேலையே இல்லம்மா உங்களுக்கு… உயிரை வாங்குறீங்க..!”  என சிடுசிடுத்ததும் அதை எல்லாம் அலட்சியம் செய்தபடி தட்டில் உணவுடன் வந்த சுரதை,

 

“ப்ச்.. இன்னும் இங்க தான் நின்னுட்டு இருக்கியா..? சீக்கிரம் போய் கை கழுவிட்டு வா… சாப்பிடுவ”  என அவள் கூறுவதை பொருட்டாக கூட கருதாது நிற்கும் அன்னையை முறைக்கு மட்டுமே முடிந்தது நறுமுகையால் …

வெயிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைக் கிள்ளிட, ஏதும் பேசாது அன்னையிடமிருந்து தட்டினை வாங்கியவள் முதலில் வயிறார உண்டு முடித்தாள்…

அதற்காகவே காத்திருந்தது போல கை கழுவி வந்தவளிடம்,

” இன்னொரு முறை குளிச்சிடுறியா..?” என வாயெல்லாம் பல்லாக கேட்ட சுரதையை இப்போது அனல் தெறிக்க பார்த்த நறுமுகை,

 

“ ம்மாஆஆ… சும்மா இரு சொல்லிட்டேன்.. காண்டு ஏத்திக்கிட்டு இருக்க… நான் இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்.. இதுல நான் இன்னொருவாட்டி வேற குளிக்கணுமா ..??? நீங்க பண்ற வேலைக்கு….”

“சரிடி… சரிடி ரொம்ப சலிச்சுக்காத …நீ ரெடி ஆகு அதுவே போதும்..”  என்றதும் அச்சமயம் நறுமுகையின் பெரியப்பா மகளான ராகினியும் ரோகிணியும் வந்திருந்தனர்…

 

ராகினி நறுமுகையை விட ஐந்து வயது சிறியவள்.. அவள் தற்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு பார்க்கிறாள்…ரோகிணி பத்தாம் வகுப்பு படிக்கிறாள் ..

 

இருவரும் இன்று அரை நாள் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்திருந்தனர்.. வரும்போதே ஆடையை மட்டும் அணிந்து வந்திருந்தவர்கள், அணிகலன்கள் அனைத்தையும் பாக்ஸ் ஒன்றில் போட்டு கையோடு கொண்டு வந்து விட்டிருந்தனர்… 

 

நறுமுகையை பார்த்து ,

 

“என்னக்கா ரெடியாகிட்டியா?”  என நக்கலாக கேட்ட ராகினியை பல்லை கடித்துப் பார்த்த நறுமுகை,

 

“இப்பதான் உன் சித்தி என்கிட்ட வாங்கி கட்டிகிட்டாங்க ..இப்ப நீ வாங்க போறியா? தள்ளுடி” என அவளை முந்திக்கொண்டு அறைக்குச் சென்று கதவை அடைத்தவள், புடவை அணிந்து கொண்டு கதவை திறந்தாள்…

அதற்காகவே காத்திருந்தது போல ராகினியும் ரோகிணியும் தாங்கள் கொண்டு வந்த பையினை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றனர்…

 

“சீக்கிரம் ஏசியை போடுடீ… ரொம்பவே வேர்க்குது. ..” என ரோகிணி கூறியதும் ராகினி ரிமோட்டை எடுத்து ஏசியை போட்டு விட்டு தன் தலை முடியை அவிழ்த்து விட்டாள்…

பின் ஒவ்வொருவரும் அவரவருக்கு மாற்றி மாற்றி தலைவாரி அழகாய் அலங்காரம் செய்து தயாராகிட.. நேரம் சிட்டாய் பறந்தது ..

வளவன் கூட அன்று மதியமே வீட்டிற்கு வந்து விட்டிருந்தார்.. நறுமுகையின் பெரியம்மாவான வித்யாவும் வீட்டிற்கு வந்துவிட, பாரி மட்டும் மாலை போல வந்து விடுவதாக கூறியிருந்தார்..

அனைவரும் தயாராகி வீட்டினை சற்று ஒதுங்க வைத்தனர்…அனைத்தும் சரியாக இருக்கிறதா என பார்த்து பார்த்து  சரி செய்து கொண்டிருந்தார் வளவன்…

 

“சுரதை எல்லாம் ரெடி பண்ணிட்டியா? ”

 

”  ரெடியாதாங்க இருக்கு.. அவங்க எப்ப கிளம்பி வராங்கன்னு கேளுங்க ..அவங்க வரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி சூடா போட்டா கரெக்டா இருக்கும்..”  

 

“ம்ம்ம்… எல்லாம் சரியா இருக்கணும் சொல்லிட்டேன்.. அவ ரெடி ஆயிட்டாளா..?”  என்ற கணம் ராகினியும் ரோகிணியும் பளிச்சென்று தயாராகி அறையில் இருந்து வெளிவந்து நின்று,

 

“ நாங்க ரெடி சித்தப்பா.. அக்கா தான் ரெடி ஆயிட்டு இருக்கா..”

 

” நல்லா இருக்கீங்க… சீக்கிரம் உங்க அக்காவை ரெடியாக சொல்லுங்க… எல்லாரும் ரூம்ல தான் இருக்கணும்.. எப்போ கூப்பிடறோமோ அப்பதான் உங்க அக்காவை கூட்டிட்டு வரணும்.. சரியா..?”  என்றதும் தலையை பலமாக ஆட்டி வைத்தனர் அந்த சில்வண்டுகள் இரண்டும் …

 

ஆம் நறுமுகையே பெண் பார்க்க தான் இன்று வர விருப்பதாக தெரிவித்து இருந்தார் வளவன்.. அதுவும் இன்று காலையில் தான் விஷயத்தையே அவளிடம் தெரிவித்து இருந்தனர் அவளது பெற்றோர்கள்…

 

கேட்ட அவளது முகம் விளக்கெண்ணையை குடித்தது போல அஷ்ட கோணல் ஆகியது..

தந்தையிடம் மறுத்து பேச முடியாது ..தாயிடம் கெஞ்சிப் பார்த்தாள்.. மிஞ்சிப் பார்த்தாள் ஒன்றும் வேலைக்காகவில்லை..

 

” நீ எதுவா இருந்தாலும் உங்க அப்பா கிட்ட பேசிக்கோ ..!” என ஒற்றை வார்த்தையில் மகளை அடக்கி விட்டிருந்தார் சுரதை …

 

சரியாக ஐந்து மணி அளவில் வீட்டின் முன்னே காரின் சத்தம் கேட்டது …

 

அறைக்குள் இருந்த நறுமுகைக்கு அவ்வளவு நேரம் இருந்த இதம் எல்லாம் மறைந்து ஒரு வித பதட்டமும்  பயமும் தொற்றிக்கொள்ள கைகளை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள்…

அவள் அருகே அமர்ந்திருந்த ராகினியும் கண்ணாடியை பார்த்து,

 

” முகை இந்த லிப் ஷேட் எனக்கு கரெக்ட்டா இருக்குல்ல..??”  என கேட்டவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தவள்,

 

“ பொண்ணு என்னை பார்க்க வராங்களா..?? இல்ல உங்களை பார்க்க வராங்களாடி ..?”

 

“ப்ச்..யாரை பார்க்க வந்தா என்ன..??  நாங்களும் பளிச்சுன்னு இருக்க வேணாமா..?”  என்றதும் அவளது தலையிலேயே கொட்டி வைத்தாள் முகை ..

 

“எனக்கே பயமா இருக்குன்னு  பதறிட்டு இருக்கேன்.. நீங்க வேற அட்டகாசம் பண்றீங்களா..?? போங்கடி வெளியில ..”

“ஐய… நாங்க போனா அப்புறம் வந்திருக்கிற மாப்பிள்ளை நாங்க தான் பொண்ணு நினைச்சுக்க போறாங்க..?? என்னடி..!”  என தங்கையிடம் கேட்டு விட இருவரும் சேர்ந்து கையை தட்டி கொண்டனர்…

அதை பார்த்து முகைக்கு வயிறு எல்லாம் எரிந்தது …

 

ரோகிணி தான் ,

 

“ராகி விடுடி ..ஏற்கனவே முகை கடுப்புல இருக்கா.. நீ கவலைப்படாத முகை இந்த பஜ்ஜியை வாயில வச்சுக்கோ எல்லாம் சரியாயிடும்..”  என சுட சுடச்சுட இருவரது தாய்மார்களும் போட்ட பஜ்ஜி தட்டில் இருக்க அதைத்தான் அவளது வாயில் திணித்து இருந்தாள்… 

“ஏன்டீ இப்படி என்னை சாகடிக்கிறீங்க..?? தள்ளி போங்கடீ… நான் பஜ்ஜி சாப்பிட்டு மனசை ஆத்துறேன்..”  என பஜ்ஜியை அவசர அவசரமாய் முழுங்கி கொண்டு இருந்தாள் முகை …

பெரியவர்கள் நால்வரும்,

 

” வாங்க ..வாங்க ..” என வந்திருப்பவர்களை வரவேற்கும் சத்தம் நன்றாகவே கேட்டது அறைக்குள்…

 

கதவை லேசாய் திறந்து வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ராகினி தான் தலை திருப்பி முகையை பார்த்து ,

 

“மாப்பிள்ளை சூப்பர் ..” என்றதும் சட்டென பயம் பிடித்துக் கொண்டது நறுமுகைக்கு..

கைகள் எல்லாம் சில்லிட அவளுக்கு அருகே பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்த ரோகிணி தான்,

 

” பயப்படாத முகை.. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடு அவ்வளவு தானே.. எதுக்கு இப்படி பயந்து சாகுற ..?” என இயல்பாக தான் கூறினாள் ..

 

ஆனால் அதை ஏற்கும் மன நிலையில் தான் நறுமுகை இல்லை..

சிறிது நேரம் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள் பின்பு வித்யா அறைக்கு உள்ளே வந்தவர்,

 

” வா முகை.. வர சொல்றாங்க..”  என்றதும் பக் என்று ஆனது நறுமுகைக்கு..

” பயமா இருக்கு பெரியம்மா…” என்றவளை வாஞ்சையாக பார்த்தவர் ,

 

“ஒன்னும் இல்ல.. வா.. பார்த்துட்டு மட்டும் போ..” என்றதும் அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்…

தலை குனிந்தபடி நின்றிருந்தவளுக்கு பயம் உச்சத்தில் இருந்தது எனலாம்..

ஏனோ உள்ளங்கால் முதல் உள்ளங்கை வரை அனைத்தும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது..

அச்சமயம் காபி கோப்பைகள் அடங்கிய ட்ரேவை  கொண்டு வந்த சுரதை மகள் கையில் திணித்து ,

 

“எல்லாருக்கும் கொடு.”  என்றதும் தலை குனிந்தவாறு முதலில் தன் தந்தைக்கு கொடுத்திட, அவரும்,

” வந்தவங்களுக்கு கொடுடா..”  என்றதும் அவருக்கு அருகே சோஃபாவில் அமர்ந்திருந்த தன் தந்தை வயதுடைய ஒருவருக்கு தந்தாள்…

மெல்ல தலை உயர்த்தி சிறு புன்னகை உதிர்த்தவள் பின் அவருக்கு அருகே அமர்ந்திருந்த அவரது மனைவிக்கு தந்தாள்…அவரும் நறுமுகையை தான் புன்னகை முகமாக பார்த்தவாறு இருந்தார்… 

 

நறுமுகையும் மென் புன்னகையுடன் பார்த்தவள் பின்பு திரும்பிட ,

 

“பையன் அங்க இருக்காங்க… அவங்களுக்கு கொடும்மா..”  என்றதும் முகைக்கு அடி வயிற்றில் ஏதோ உருண்டது…

தலை குனிந்து வந்திருந்த மாப்பிள்ளை பையனின் அருகே சென்று ட்ரேவினை நீட்டிட, அதை தனது நீண்ட விரல்கள் அடங்கிய கரங்களால் கச்சிதமாய் கோப்பையை பிடித்து எடுத்ததும் அவனது கரத்தை பார்த்த நறுமுகை மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி அங்க அமர்ந்திருந்த உருவத்தினை பார்த்தவளது இதயம் நின்று துடித்தது …

 

ஆம் அங்கு இருந்தது வேறு யாரும் அல்ல விக்ரம் தான் ..

 

முழுக்கை லெனின் வெள்ளை சட்டையும் அதற்கு பொருத்தமான நீல நிற ஜீன்ஸ் அணிந்து இருந்தான்…

 

கூர் விழிகளால் அவளையே பார்த்தவாறு அவள் தந்த காபியினை ஒரு மிடறு குடித்து விட்டு அவளை அழுத்தமாய் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..அவனது பார்வையில் நறுமுகைக்கு நெஞ்சமே அடைத்துவிட்டது…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top