திட்டும் பார்வை…ஒட்டும் இதயம் ❤️

அத்தியாயம் 1 

 

 

 

தேர்வு அறைக்குள் நிலவும் ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி, திடீரென மணியடித்ததும் உடைகிறது…. மாணவர்கள் மூச்சினை வெளியே விட்டுக்கொண்டு தாங்கள் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதிய பேப்பர்களை பேராசிரியர்களிடம் ஒவ்வொருவராய் ஒப்படைத்தார்கள்.…

ஹாலை விட்டு வெளியே வந்ததும், சிலர் கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்க.. சிலர் ஒருவருக்கொருவர் விடைகளை விவாதித்து விவாதம் செய்கின்றனர்…

 

ஒரு மூலையில் சிலர் அமைதியாக “மார்க் வருமா?” என்று கவலையோடு பேசிக் கொண்டு இருக்கிறார்கள்…

 

 

“இனிமே தான் நிம்மதி” என்கிற உற்சாகம் எல்லா முகங்களிலும் தெரிகிறது.…

 

முதுகலை மூன்றாம் செமஸ்டரின் இறுதிப் பரீட்சை அன்று தான் முடிந்து விட்டிருந்தது …உற்சாகமாக வெளியே வந்தாள் நம் கதையின் நாயகி நறுமுகை…

 

அவளுடன் பயில்பவளோ,

 

“ என்ன முகை நல்லா எக்ஸாம் பண்ணிருக்க போல ..?”

 

“ஆமா ..எப்படியோ இந்த எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சு போச்சு ..அது வரைக்கும் சந்தோஷம் ….விட்டது சனி..” என்றவளை வெளியே சிரிப்புடன்  பார்த்தாலும் உள்ளுக்குள் பொறாமையுடன் கண்ட கௌசல்யா ,

 

“ம்ம்ம்ம்…உனக்கு என்னமா நீயெல்லாம் மார்க் எடுத்துடுவ…நாங்க தான் மார்க் எடுக்க கஷ்டப்படனும்…” என சோகம் போல கூறினாலும் அவ்வார்த்தைகளுக்கு  பின்னால் இருக்கும் எள்ளலை நன்றாகவே அறிவாள் நறுமுகை…

பதிலேதும் கூறாது இதழை வளைத்து சிரித்தவளிடம்,

 

“ப்ராஜெக்ட் எப்போ ஆரம்பிக்க போறாங்க உனக்கு ..?” என கேட்டிட,  

 

“இரண்டு நாள் கழிச்சு வர சொன்னாங்க…நானும் கவிதாவும் லேப்ல போய் கேட்டுட்டு போகணும்.. இன்னிக்கு தான் யார் கைட்னு சொல்வேன்னு சொன்னாரு நாகராஜன் சார்.. கவிதா எங்க..?”  என அவள் கேட்கும் போதே வகுப்பறையில் இருந்து வெளி வந்தாள் கவிதா ..

 

நறுமுகையை பார்த்ததும் அவளிடம் பேசலாம் என வந்தவள் முன்பு வந்து நின்ற கெளசல்யா,

 

“எப்படி பண்ணடீ எக்ஸாம்…?” என வேண்டும் என்றே நறுமுகையிடம் பேச விடாது அவளிடம் கேட்டவாறு திசை திருப்பினாள்..

 

ஆனால் கவிதாவிற்கு நறுமுகையிடம் பேச வேண்டும் என்பதால் அவளை நோக்கி அடி எடுத்தவாறே,

 

“நல்லா பண்ணி இருக்கேன்டீ…டீடைல் தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு…பண்ணி இருக்கேன்…பார்ப்போம்…”

 

“செகேண்ட் கொஸ்டீன்க்கு என்னடீ அன்சர் எழுதுன..?? எப்படி கேட்டு வெச்சிருக்காங்க பாரேன்..” என கெளசல்யா அவளிடம் பேச்சினை வளர்த்திட..அதை புரிந்தாற்போல நறுமுகை கவிதாவின் முன் வந்து நின்று,

 

“லேபுக்கு போய் கேட்கலாமா..?”

 

” ஹான்…சரிடீ…லேபுக்கு போய் சார்கிட்ட கேட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போகலாம்டி ..” என்றதும் நறுமுகையும் கவிதாவும் நான்காம் தளத்தில் இருக்கும் பேராசிரியர் நாகராஜனின் அறைக்கு சென்று கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்திட.. அவர்களைக் கண்டதும் தலையசைத்து வரவேற்றவர்,

 

” எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணிங்கலாம்மா ..?” என குரலில் அக்கறை நிறைந்து கேட்டார்…

 

“நல்லா பண்ணியிருக்கோம் சார் ..” என இருவரும் கோரசாய் பதிலளித்ததும்,

 

“சரிம்மா …வீட்டுக்கு போங்க.. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கப்புறம் காலேஜ் வந்துருங்க..

ஏன்னா நம்ம இப்பல இருந்து ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணா தான் கொஞ்சம் ஃப்ரீயா பண்ண முடியும்.. லீவ் இருக்கு டைம் இருக்குன்னு நாம நினைச்சுட்டு பொறுமையா ஆரம்பிச்சா கடைசியில் ஏதாவது நெருக்கடி ஆயிடும்…

ஏன்னா நம்ம நிறைய டெஸ்ட் எல்லாம் பண்ணுவோம் ..அதுல ஏதாவது கொஞ்சம் டெஸ்ட் ரிசல்ட் மிஸ் ஆகி வரலாம், அப்போ நம்ம திரும்ப பண்ணுற மாதிரி வரும்.. அதுக்கு இன்னும் டைம் எடுக்கும்..

அதனால் நம்ம இப்பவே பண்ண ஆரம்பிச்சா தான் கரெக்டா இருக்கும் ..சரிங்களா..?” என பொறாமையாய்   பெண்கள் இருவருக்கும் எடுத்துரைத்திட…அவர் கூறிய கூற்றில் இருக்கும் உண்மையில் இருவரும் ஒருசேர தலையாட்டி வைத்தனர்..

 

கவிதா தான் ,

 

“சார் எங்களை யார் கைட் பண்ணுவாங்கனு நீங்க சொல்லவே இல்லையே..”  என்றதும் நினைவு வந்தவராய்,

 

“ஹான்.. ஆமாம்மா சொல்லவே மறந்துட்டேன் பாரேன்..”  என்றவர் கோப்பையில் இருக்கும் அச்சிடப்பட்ட காகிதத்தை பார்த்தவராய்,

 

“கவிதா உங்களுக்கு சாமுவேல் கைட் பண்ணுவாரு.. நறுமுகை உங்களுக்கு விக்ரம் கைட் பண்ணுவாரு..”  என்றதும் இருவரும் அவரிடம் நன்றி தெரிவித்து விட்டு அறையில் இருந்து வெளிவந்தனர்..

நறுமுகை தான் ,

 

“சாமுவேல் அண்ணாடீ உனக்கு…ம்ம்ம் அவர் வந்தா சூப்பர்ல…”என்றதும் கவிதாவும்,

 

“ம்ம்ம்… தெரிஞ்ச அண்ணாவா இருந்தா பரவால்ல…ஆமா விக்ரம் யாருடி.. நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்ல..”  என கேட்டதும் நறுமுகையும் யோசனையாக,

 

”  எனக்கும் தெரியலடீ… ஒருவேளை நாம் பார்த்திருக்க மாட்டோமோ என்னவோ…கிளாஸ் பசங்க கிட்ட கேட்டு பார்க்கலாம்..!”  என பெண்கள் இருவரும் பேசியவாறு லிப்டில் செல்வதற்கான பட்டனை அழுத்திவிட்டு நிற்க சில நொடிகளில் லிப்ட் நின்று திறந்தது..

 

அதில் நெடுநெடுவென உயரமாக வளர்ந்து இருந்த ஒருவன் வெளியே நின்றிருந்த இருவரையும் அழுத்தமாய் பார்த்துவிட்டு அவர்களை கடந்து சென்றுவிட… ஒரு கணம் நறுமுகையின் பார்வை அவன் மேல் படிந்து மீண்டது…

 

மனதிற்குள் அவளது உள் உணர்வு எடுத்துரைத்தது,

‘ஒருவேளை இது தான் விக்ரமோ…?..ம்ம்ம்…அழகா வேற இருக்கான்..’ என எண்ணியவாறு லிப்டிற்குள் நுழைந்த பின்னரும் செல்பவனது முதுகை வெறித்தாள் நறுமுகை…

 

அவளை பக்கவாட்டாய் பார்த்த கவிதா பெருமூச்சுடன் தலையை திருப்பி கொண்டாள்…

 

கீழ் தளத்திற்கு இறங்கி வந்ததும் கவிதா கெளசல்யா உடன் இணைந்து நடக்க ஆரம்பித்துவிட்டாள்…நறுமுகைஅவர்களை ஒரு பார்வை பார்த்தவள் பின் அங்கு வந்த அவளது வகுப்பு தோழன்  ஜானிடம் சென்று,

 

“ஜான்…உனக்கு விக்ரம்னு யாரையாவது தெரியுமா…?”

 

“ஏன் மச்சா??” என இயல்பாக கேட்டான்…இதற்கு முன்னர் பள்ளியில் இருந்து இளங்கலை வரை படித்தது எல்லாம் ஆண்கள் படிக்கும் பற்றி மற்றும் கல்லூரியில் தான்…அதனாலேயே தன்னிடம் பழகும் பெண்களை கூட பேச்சு வாக்கில் ‘மச்சா’ என்றே அழைத்து விடுவான் ஜான்…

கல்லூரி சேர்ந்த புதிதில் இவன் வகுப்பு பெண்களுக்கு அவ்வழைப்பு ஒரு மாதிரியாக இருந்தாலும் அவனது இயல்பே அப்படி தான் எனும் போது அவர்களும் ஏற்றுக்கொண்டனர்…

“இல்லடா நாகராஜன் சார் விக்ரம்னு ஒருத்தரை தான் எனக்கு கைடா போட்டு இருக்காரு…யார்னு எனக்கு தெரியலை…உனக்கு தெரியுமானு கேட்குறேன்…”

 

“ஏய்..விக்ரம் அண்ணாவா…செம போ…அவர் ஜாலி டைப் மச்சா…நல்ல கைட் உனக்கு…யூஸ் பண்ணிக்கோ மச்சா…சூப்பரா சொல்லி தருவாரு…லைப்ரரில புக்ஸ்லாம் அவர்கிட்ட தான் ரெஃப்ரன்ஸ்க்கு கேட்டு எடுத்து படிப்பேன்..செம டேலன்டட்…” என ஜான் விக்ரமின் திறமையை பற்றி புகழாரம் வாசித்திட, கேட்ட நறுமுகைக்கு வயிற்றில் புளியை கரைத்தது…

முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது காது வரை இளித்து தானும் சந்தோஷப்படுவது போல காட்டிக் கொண்டாள் நறுமுகை…

 

மனதில் ,

 

‘இந்த ப்ராஜெக்ட்டை செய்தே ஆக வேண்டுமா?’ என்று தான் தோன்றியது அவளுக்கு…

 

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே கவிதாவும் கெளசல்யாவும் பேசியவாறு நடந்து சென்று விட்டனர்..அவர்களுடன் மற்றொரு தோழியான அஸ்வினியும்.. 

 

வேகவேகமாக தானும் நடந்து சென்ற நறுமுகை, அவளை விட்டு இருபது அடி தூரத்தில் நடந்து செல்பவர்களை கண்டதும் தன் நடையின் வேகத்தை குறைத்தவளாய் சற்று மெதுவாக நடக்க  துவங்கினாள்…

 

செல்லும் அவர்களை கண்டவளுக்கு மனதில் ஒரு வலி வந்து விட்டு சென்றது…

பலவீனமடையாதே மனமே என வழக்கம் போல தனக்கு தானே சொல்லி கொண்டவள் பெருமூச்சை விட்டு மெதுவாக நடந்தாள்…

 

இவர்கள் படிக்கும் கல்லூரி வளாகத்தில் இருந்து கேட்டை அடைவதற்கே கிட்டத்தட்ட குறைந்தது அரை மணி நேரமாவதே ஆகும்..

 

வேகமாக நடந்தால் இருபது நிமிடங்களில் வந்து சேரலாம் ..

 

ஏன் அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கே பத்து நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும் …கெளசல்யா கல்லூரியின் வலப்புறத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நறுமுகை ,கவிதா மற்றும் அஸ்வினி மூவரும் இடப்புறத்தில் பெரிய சாலையை கடந்து எதிரே இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும்…

அஸ்வினி இரண்டாவது நிறுத்தத்தில் இறங்கி வேறு ஒரு பேருந்தை பிடிக்க வேண்டும்…

நறுமுகை மற்றும் கவிதா இருவரும் ஒரே ஊர்தான்…  என்ன அடுத்தடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வார்கள் …

 

இத்தனைக்கும் இவர்கள் நால்வரும் இளங்கலை  புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் தான் படித்தனர்…நால்வரும் ஒரே வகுப்பு…நெருங்கிய நண்பர்களும் கூட…

 

முதுகலை சேர்ந்து முழுதாய் ஒரு வருடம் கூட முடிக்கவில்லை ,அதற்குள் நால்வர் கூட்டணி மூவர் கூட்டணியாகி நறுமுகையை மட்டும் தனியே கழட்டி விட்டு விட்டனர்..

கவிதாவின் உயிர்த்தோழி நறுமுகை…அவளுக்காக கவிதா என்னவும் செய்திடுவாள்…அதே தான் நறுமுகையும்…கவிதா என்றால் எப்போதும் அவளுக்கு. ஸ்பெஷல் தான்.…

 

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்வார்கள்…எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள்…

 

அப்படி இருந்தவர்கள் தான் தற்போது ஒரே வழியில் தனிதனியாக பயணம் செய்கின்றனர்…இவர்களை பிரித்தது விதியா அல்லது வேறொருவரின் சதியா?…பார்ப்போம்…

 

நாகராஜனின் அறைக்கதவை தட்டி அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றான் அவன்…நறுமுகை லிஃப்ட்டில் பார்த்து இவன் தான் விக்ரமா இருக்குமோ என எண்ணினாளே?  அவனே தான் வந்து இருந்தான்…

 

அவனை கண்ட நாகராஜன்,

 

“வா விக்ரம்… உட்கார்” என்றதும் மறுக்காது இருக்கையில் அமர்ந்தான் விக்ரம்..

“எம்எஸ்சி படிக்கிற ஸ்டூடண்ட்க்கு  நீ கையிட் பண்ணனும்னு சொல்லி இருந்தேன்லப்பா..?”

“ஆமா சார்..நேம் லிஸ்ட் வந்துச்சா..?”

 

“ஹான் வந்துச்சுப்பா…நறுமுகைக்கு தான் நீங்க கைட் பண்ண போறீங்க…நீங்க பார்த்து இருப்பீங்கனு நினைக்குறேன்..இப்ப தான் வெளிய போனாங்க…?” என கேட்டவரிடம்,

 

“ரெண்டு பேர் போனாங்க பார்த்தேன் சார்…பட் சரியா கவனிக்கலை..” என மறைக்காது பேசியவனிடம்,

 

“அப்படியா சரிப்பா…ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லி இருக்கேன்…நீங்க பார்த்துக்கோங்க…”

 

“ஓகே சார்..நான் பார்த்துக்கிறேன்..”என்றவன் மனதிற்குள் நறுமுகையின் பெயரை ஒன்றுக்கு இரண்டு முறை கூறிப்பார்த்துக் கொண்டான்…

 

அவளது வகுப்பில் மொத்தம் இருபது பேர் படிக்கின்றனர்…பத்து ஆண்கள்,பத்து பெண்கள் உள்ளனர்…அந்த பத்து ஆண்களும் விக்ரமிற்கு அத்துப்படி…

பெண்களிடம் அவ்வளவாய் பேசியதில்லை…அவர்களிடம் பேசும் அவசியமும் வந்தது இல்லை..

 

இப்போது நறுமுகையை பற்றி தெரிந்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு…சற்று யோசித்தவன் பின் நூலகத்திற்கு சென்றிட..அங்கு கணினியின் முன்பு இருந்தான் ஜான்…அவனை கண்டதும் வழக்கம்போல ,

 

“என்னடா ப்ராஜெக்ட் கைட் யார்னு சொன்னாங்களா..?”என கேட்டவாறு ஜானுக்கு அருகே இருந்த மற்றொரு கணினியில் அமர்ந்து எதையோ தேடியவாறு கேட்டு வைத்தான் விக்ரம்…

 

“ஆமா அண்ணா சொல்லி இருக்காங்க…ப்ரதீப் அண்ணாவாமே…”

 

“ஓஓ…நல்லா தான் சொல்லி தருவான்..பட் கொஞ்சம் பிகு பண்ணுவான் பார்த்துக்கோ…”

 

“ஓகே அண்ணா…நீங்க என் கிளாஸ் பொண்ணு நறுமுகைக்கு கைட் பண்ணுறீங்களாமே..?” என ஜான் கேட்டதும் விக்ரமின் விழிகள் இரண்டும் சுருங்கின…

 

“உனக்கு யார்டா சொன்னது…?”

 

“அவ தான் வந்து உங்களை பத்தி கேட்டா…நானும் நல்லா சொல்லி தருவாருன்னு சொன்னேன்…” என்றதும் தனக்கு வேலை வைக்காது ஜானே பேச்சினை ஆரம்பித்திடவும்,

 

“ம்ம்ம்…அந்த பொண்ணு எப்படி படிக்கும்…?” என கணினி திரையில் பார்வை பதித்தவாறு அருகே இருப்பவனிடம் கேள்வியை கேட்டு வைத்தான் விக்ரம்..

 

“ஹான் …நல்லா படிப்பா அண்ணா… ராதாகிருஷ்ணன் சார் சப்ஜெக்ட்ல அந்த பொண்ணு தான் மார்க் நல்லா ஸ்கோர் பண்ணுவாண்ணா…”என கூடுதல் தகவல் அளித்து விட்டிருந்தான் ஜான்…

 

கேட்ட விக்ரமிற்கு திருப்தியாக இருந்தது… ஏனெனில் ராதாகிருஷ்ணன் தான் இருக்கும் பேராசிரியர்களில் சற்று கெடுபிடியான ஆள்..அனைத்திலும் பர்பெக்ஷன் எதிர்பார்ப்பவர்…

அவரை போல தான் விக்ரமும்…

தற்போது நறுமுகையும் அவரது பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்..? அவள் நன்‌றாக படிக்கும் மாணவி என்பது அப்பட்டமாய் தெரிந்தது…இந்த  தகவலே  போதும் என கருதிய விக்ரம் ,ஜானிடம் சொல்லிக் கொண்டு நூலகத்தில் இருந்து வெளியேறி விட்டான்.…

 

விக்ரமின் எதிர்பார்ப்பு பொய்த்து போகுமா..? பார்ப்போம்…

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏🙏🙏🙏 தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கவும் ☺️☺️☺️☺️

 

 

 

தேர்வு அறைக்குள் நிலவும் ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி, திடீரென மணியடித்ததும் உடைகிறது…. மாணவர்கள் மூச்சினை வெளியே விட்டுக்கொண்டு தாங்கள் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதிய பேப்பர்களை பேராசிரியர்களிடம் ஒவ்வொருவராய் ஒப்படைத்தார்கள்.…

ஹாலை விட்டு வெளியே வந்ததும், சிலர் கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்க.. சிலர் ஒருவருக்கொருவர் விடைகளை விவாதித்து விவாதம் செய்கின்றனர்…

 

ஒரு மூலையில் சிலர் அமைதியாக “மார்க் வருமா?” என்று கவலையோடு பேசிக் கொண்டு இருக்கிறார்கள்…

 

 

“இனிமே தான் நிம்மதி” என்கிற உற்சாகம் எல்லா முகங்களிலும் தெரிகிறது.…

 

முதுகலை மூன்றாம் செமஸ்டரின் இறுதிப் பரீட்சை அன்று தான் முடிந்து விட்டிருந்தது …உற்சாகமாக வெளியே வந்தாள் நம் கதையின் நாயகி நறுமுகை…

 

அவளுடன் பயில்பவளோ,

 

“ என்ன முகை நல்லா எக்ஸாம் பண்ணிருக்க போல ..?”

 

“ஆமா ..எப்படியோ இந்த எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சு போச்சு ..அது வரைக்கும் சந்தோஷம் ….விட்டது சனி..” என்றவளை வெளியே சிரிப்புடன்  பார்த்தாலும் உள்ளுக்குள் பொறாமையுடன் கண்ட கௌசல்யா ,

 

“ம்ம்ம்ம்…உனக்கு என்னமா நீயெல்லாம் மார்க் எடுத்துடுவ…நாங்க தான் மார்க் எடுக்க கஷ்டப்படனும்…” என சோகம் போல கூறினாலும் அவ்வார்த்தைகளுக்கு  பின்னால் இருக்கும் எள்ளலை நன்றாகவே அறிவாள் நறுமுகை…

பதிலேதும் கூறாது இதழை வளைத்து சிரித்தவளிடம்,

 

“ப்ராஜெக்ட் எப்போ ஆரம்பிக்க போறாங்க உனக்கு ..?” என கேட்டிட,  

 

“இரண்டு நாள் கழிச்சு வர சொன்னாங்க…நானும் கவிதாவும் லேப்ல போய் கேட்டுட்டு போகணும்.. இன்னிக்கு தான் யார் கைட்னு சொல்வேன்னு சொன்னாரு நாகராஜன் சார்.. கவிதா எங்க..?”  என அவள் கேட்கும் போதே வகுப்பறையில் இருந்து வெளி வந்தாள் கவிதா ..

 

நறுமுகையை பார்த்ததும் அவளிடம் பேசலாம் என வந்தவள் முன்பு வந்து நின்ற கெளசல்யா,

 

“எப்படி பண்ணடீ எக்ஸாம்…?” என வேண்டும் என்றே நறுமுகையிடம் பேச விடாது அவளிடம் கேட்டவாறு திசை திருப்பினாள்..

 

ஆனால் கவிதாவிற்கு நறுமுகையிடம் பேச வேண்டும் என்பதால் அவளை நோக்கி அடி எடுத்தவாறே,

 

“நல்லா பண்ணி இருக்கேன்டீ…டீடைல் தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு…பண்ணி இருக்கேன்…பார்ப்போம்…”

 

“செகேண்ட் கொஸ்டீன்க்கு என்னடீ அன்சர் எழுதுன..?? எப்படி கேட்டு வெச்சிருக்காங்க பாரேன்..” என கெளசல்யா அவளிடம் பேச்சினை வளர்த்திட..அதை புரிந்தாற்போல நறுமுகை கவிதாவின் முன் வந்து நின்று,

 

“லேபுக்கு போய் கேட்கலாமா..?”

 

” ஹான்…சரிடீ…லேபுக்கு போய் சார்கிட்ட கேட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போகலாம்டி ..” என்றதும் நறுமுகையும் கவிதாவும் நான்காம் தளத்தில் இருக்கும் பேராசிரியர் நாகராஜனின் அறைக்கு சென்று கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்திட.. அவர்களைக் கண்டதும் தலையசைத்து வரவேற்றவர்,

 

” எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணிங்கலாம்மா ..?” என குரலில் அக்கறை நிறைந்து கேட்டார்…

 

“நல்லா பண்ணியிருக்கோம் சார் ..” என இருவரும் கோரசாய் பதிலளித்ததும்,

 

“சரிம்மா …வீட்டுக்கு போங்க.. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கப்புறம் காலேஜ் வந்துருங்க..

ஏன்னா நம்ம இப்பல இருந்து ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணா தான் கொஞ்சம் ஃப்ரீயா பண்ண முடியும்.. லீவ் இருக்கு டைம் இருக்குன்னு நாம நினைச்சுட்டு பொறுமையா ஆரம்பிச்சா கடைசியில் ஏதாவது நெருக்கடி ஆயிடும்…

ஏன்னா நம்ம நிறைய டெஸ்ட் எல்லாம் பண்ணுவோம் ..அதுல ஏதாவது கொஞ்சம் டெஸ்ட் ரிசல்ட் மிஸ் ஆகி வரலாம், அப்போ நம்ம திரும்ப பண்ணுற மாதிரி வரும்.. அதுக்கு இன்னும் டைம் எடுக்கும்..

அதனால் நம்ம இப்பவே பண்ண ஆரம்பிச்சா தான் கரெக்டா இருக்கும் ..சரிங்களா..?” என பொறாமையாய்   பெண்கள் இருவருக்கும் எடுத்துரைத்திட…அவர் கூறிய கூற்றில் இருக்கும் உண்மையில் இருவரும் ஒருசேர தலையாட்டி வைத்தனர்..

 

கவிதா தான் ,

 

“சார் எங்களை யார் கைட் பண்ணுவாங்கனு நீங்க சொல்லவே இல்லையே..”  என்றதும் நினைவு வந்தவராய்,

 

“ஹான்.. ஆமாம்மா சொல்லவே மறந்துட்டேன் பாரேன்..”  என்றவர் கோப்பையில் இருக்கும் அச்சிடப்பட்ட காகிதத்தை பார்த்தவராய்,

 

“கவிதா உங்களுக்கு சாமுவேல் கைட் பண்ணுவாரு.. நறுமுகை உங்களுக்கு விக்ரம் கைட் பண்ணுவாரு..”  என்றதும் இருவரும் அவரிடம் நன்றி தெரிவித்து விட்டு அறையில் இருந்து வெளிவந்தனர்..

நறுமுகை தான் ,

 

“சாமுவேல் அண்ணாடீ உனக்கு…ம்ம்ம் அவர் வந்தா சூப்பர்ல…”என்றதும் கவிதாவும்,

 

“ம்ம்ம்… தெரிஞ்ச அண்ணாவா இருந்தா பரவால்ல…ஆமா விக்ரம் யாருடி.. நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்ல..”  என கேட்டதும் நறுமுகையும் யோசனையாக,

 

”  எனக்கும் தெரியலடீ… ஒருவேளை நாம் பார்த்திருக்க மாட்டோமோ என்னவோ…கிளாஸ் பசங்க கிட்ட கேட்டு பார்க்கலாம்..!”  என பெண்கள் இருவரும் பேசியவாறு லிப்டில் செல்வதற்கான பட்டனை அழுத்திவிட்டு நிற்க சில நொடிகளில் லிப்ட் நின்று திறந்தது..

 

அதில் நெடுநெடுவென உயரமாக வளர்ந்து இருந்த ஒருவன் வெளியே நின்றிருந்த இருவரையும் அழுத்தமாய் பார்த்துவிட்டு அவர்களை கடந்து சென்றுவிட… ஒரு கணம் நறுமுகையின் பார்வை அவன் மேல் படிந்து மீண்டது…

 

மனதிற்குள் அவளது உள் உணர்வு எடுத்துரைத்தது,

‘ஒருவேளை இது தான் விக்ரமோ…?..ம்ம்ம்…அழகா வேற இருக்கான்..’ என எண்ணியவாறு லிப்டிற்குள் நுழைந்த பின்னரும் செல்பவனது முதுகை வெறித்தாள் நறுமுகை…

 

அவளை பக்கவாட்டாய் பார்த்த கவிதா பெருமூச்சுடன் தலையை திருப்பி கொண்டாள்…

 

கீழ் தளத்திற்கு இறங்கி வந்ததும் கவிதா கெளசல்யா உடன் இணைந்து நடக்க ஆரம்பித்துவிட்டாள்…நறுமுகைஅவர்களை ஒரு பார்வை பார்த்தவள் பின் அங்கு வந்த அவளது வகுப்பு தோழன்  ஜானிடம் சென்று,

 

“ஜான்…உனக்கு விக்ரம்னு யாரையாவது தெரியுமா…?”

 

“ஏன் மச்சா??” என இயல்பாக கேட்டான்…இதற்கு முன்னர் பள்ளியில் இருந்து இளங்கலை வரை படித்தது எல்லாம் ஆண்கள் படிக்கும் பற்றி மற்றும் கல்லூரியில் தான்…அதனாலேயே தன்னிடம் பழகும் பெண்களை கூட பேச்சு வாக்கில் ‘மச்சா’ என்றே அழைத்து விடுவான் ஜான்…

கல்லூரி சேர்ந்த புதிதில் இவன் வகுப்பு பெண்களுக்கு அவ்வழைப்பு ஒரு மாதிரியாக இருந்தாலும் அவனது இயல்பே அப்படி தான் எனும் போது அவர்களும் ஏற்றுக்கொண்டனர்…

“இல்லடா நாகராஜன் சார் விக்ரம்னு ஒருத்தரை தான் எனக்கு கைடா போட்டு இருக்காரு…யார்னு எனக்கு தெரியலை…உனக்கு தெரியுமானு கேட்குறேன்…”

 

“ஏய்..விக்ரம் அண்ணாவா…செம போ…அவர் ஜாலி டைப் மச்சா…நல்ல கைட் உனக்கு…யூஸ் பண்ணிக்கோ மச்சா…சூப்பரா சொல்லி தருவாரு…லைப்ரரில புக்ஸ்லாம் அவர்கிட்ட தான் ரெஃப்ரன்ஸ்க்கு கேட்டு எடுத்து படிப்பேன்..செம டேலன்டட்…” என ஜான் விக்ரமின் திறமையை பற்றி புகழாரம் வாசித்திட, கேட்ட நறுமுகைக்கு வயிற்றில் புளியை கரைத்தது…

முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது காது வரை இளித்து தானும் சந்தோஷப்படுவது போல காட்டிக் கொண்டாள் நறுமுகை…

 

மனதில் ,

 

‘இந்த ப்ராஜெக்ட்டை செய்தே ஆக வேண்டுமா?’ என்று தான் தோன்றியது அவளுக்கு…

 

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே கவிதாவும் கெளசல்யாவும் பேசியவாறு நடந்து சென்று விட்டனர்..அவர்களுடன் மற்றொரு தோழியான அஸ்வினியும்.. 

 

வேகவேகமாக தானும் நடந்து சென்ற நறுமுகை, அவளை விட்டு இருபது அடி தூரத்தில் நடந்து செல்பவர்களை கண்டதும் தன் நடையின் வேகத்தை குறைத்தவளாய் சற்று மெதுவாக நடக்க  துவங்கினாள்…

 

செல்லும் அவர்களை கண்டவளுக்கு மனதில் ஒரு வலி வந்து விட்டு சென்றது…

பலவீனமடையாதே மனமே என வழக்கம் போல தனக்கு தானே சொல்லி கொண்டவள் பெருமூச்சை விட்டு மெதுவாக நடந்தாள்…

 

இவர்கள் படிக்கும் கல்லூரி வளாகத்தில் இருந்து கேட்டை அடைவதற்கே கிட்டத்தட்ட குறைந்தது அரை மணி நேரமாவதே ஆகும்..

 

வேகமாக நடந்தால் இருபது நிமிடங்களில் வந்து சேரலாம் ..

 

ஏன் அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கே பத்து நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும் …கெளசல்யா கல்லூரியின் வலப்புறத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நறுமுகை ,கவிதா மற்றும் அஸ்வினி மூவரும் இடப்புறத்தில் பெரிய சாலையை கடந்து எதிரே இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும்…

அஸ்வினி இரண்டாவது நிறுத்தத்தில் இறங்கி வேறு ஒரு பேருந்தை பிடிக்க வேண்டும்…

நறுமுகை மற்றும் கவிதா இருவரும் ஒரே ஊர்தான்…  என்ன அடுத்தடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வார்கள் …

 

இத்தனைக்கும் இவர்கள் நால்வரும் இளங்கலை  புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் தான் படித்தனர்…நால்வரும் ஒரே வகுப்பு…நெருங்கிய நண்பர்களும் கூட…

 

முதுகலை சேர்ந்து முழுதாய் ஒரு வருடம் கூட முடிக்கவில்லை ,அதற்குள் நால்வர் கூட்டணி மூவர் கூட்டணியாகி நறுமுகையை மட்டும் தனியே கழட்டி விட்டு விட்டனர்..

கவிதாவின் உயிர்த்தோழி நறுமுகை…அவளுக்காக கவிதா என்னவும் செய்திடுவாள்…அதே தான் நறுமுகையும்…கவிதா என்றால் எப்போதும் அவளுக்கு. ஸ்பெஷல் தான்.…

 

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்வார்கள்…எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள்…

 

அப்படி இருந்தவர்கள் தான் தற்போது ஒரே வழியில் தனிதனியாக பயணம் செய்கின்றனர்…இவர்களை பிரித்தது விதியா அல்லது வேறொருவரின் சதியா?…பார்ப்போம்…

 

நாகராஜனின் அறைக்கதவை தட்டி அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றான் அவன்…நறுமுகை லிஃப்ட்டில் பார்த்து இவன் தான் விக்ரமா இருக்குமோ என எண்ணினாளே?  அவனே தான் வந்து இருந்தான்…

 

அவனை கண்ட நாகராஜன்,

 

“வா விக்ரம்… உட்கார்” என்றதும் மறுக்காது இருக்கையில் அமர்ந்தான் விக்ரம்..

“எம்எஸ்சி படிக்கிற ஸ்டூடண்ட்க்கு  நீ கையிட் பண்ணனும்னு சொல்லி இருந்தேன்லப்பா..?”

“ஆமா சார்..நேம் லிஸ்ட் வந்துச்சா..?”

 

“ஹான் வந்துச்சுப்பா…நறுமுகைக்கு தான் நீங்க கைட் பண்ண போறீங்க…நீங்க பார்த்து இருப்பீங்கனு நினைக்குறேன்..இப்ப தான் வெளிய போனாங்க…?” என கேட்டவரிடம்,

 

“ரெண்டு பேர் போனாங்க பார்த்தேன் சார்…பட் சரியா கவனிக்கலை..” என மறைக்காது பேசியவனிடம்,

 

“அப்படியா சரிப்பா…ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லி இருக்கேன்…நீங்க பார்த்துக்கோங்க…”

 

“ஓகே சார்..நான் பார்த்துக்கிறேன்..”என்றவன் மனதிற்குள் நறுமுகையின் பெயரை ஒன்றுக்கு இரண்டு முறை கூறிப்பார்த்துக் கொண்டான்…

 

அவளது வகுப்பில் மொத்தம் இருபது பேர் படிக்கின்றனர்…பத்து ஆண்கள்,பத்து பெண்கள் உள்ளனர்…அந்த பத்து ஆண்களும் விக்ரமிற்கு அத்துப்படி…

பெண்களிடம் அவ்வளவாய் பேசியதில்லை…அவர்களிடம் பேசும் அவசியமும் வந்தது இல்லை..

 

இப்போது நறுமுகையை பற்றி தெரிந்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு…சற்று யோசித்தவன் பின் நூலகத்திற்கு சென்றிட..அங்கு கணினியின் முன்பு இருந்தான் ஜான்…அவனை கண்டதும் வழக்கம்போல ,

 

“என்னடா ப்ராஜெக்ட் கைட் யார்னு சொன்னாங்களா..?”என கேட்டவாறு ஜானுக்கு அருகே இருந்த மற்றொரு கணினியில் அமர்ந்து எதையோ தேடியவாறு கேட்டு வைத்தான் விக்ரம்…

 

“ஆமா அண்ணா சொல்லி இருக்காங்க…ப்ரதீப் அண்ணாவாமே…”

 

“ஓஓ…நல்லா தான் சொல்லி தருவான்..பட் கொஞ்சம் பிகு பண்ணுவான் பார்த்துக்கோ…”

 

“ஓகே அண்ணா…நீங்க என் கிளாஸ் பொண்ணு நறுமுகைக்கு கைட் பண்ணுறீங்களாமே..?” என ஜான் கேட்டதும் விக்ரமின் விழிகள் இரண்டும் சுருங்கின…

 

“உனக்கு யார்டா சொன்னது…?”

 

“அவ தான் வந்து உங்களை பத்தி கேட்டா…நானும் நல்லா சொல்லி தருவாருன்னு சொன்னேன்…” என்றதும் தனக்கு வேலை வைக்காது ஜானே பேச்சினை ஆரம்பித்திடவும்,

 

“ம்ம்ம்…அந்த பொண்ணு எப்படி படிக்கும்…?” என கணினி திரையில் பார்வை பதித்தவாறு அருகே இருப்பவனிடம் கேள்வியை கேட்டு வைத்தான் விக்ரம்..

 

“ஹான் …நல்லா படிப்பா அண்ணா… ராதாகிருஷ்ணன் சார் சப்ஜெக்ட்ல அந்த பொண்ணு தான் மார்க் நல்லா ஸ்கோர் பண்ணுவாண்ணா…”என கூடுதல் தகவல் அளித்து விட்டிருந்தான் ஜான்…

 

கேட்ட விக்ரமிற்கு திருப்தியாக இருந்தது… ஏனெனில் ராதாகிருஷ்ணன் தான் இருக்கும் பேராசிரியர்களில் சற்று கெடுபிடியான ஆள்..அனைத்திலும் பர்பெக்ஷன் எதிர்பார்ப்பவர்…

அவரை போல தான் விக்ரமும்…

தற்போது நறுமுகையும் அவரது பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்..? அவள் நன்‌றாக படிக்கும் மாணவி என்பது அப்பட்டமாய் தெரிந்தது…இந்த  தகவலே  போதும் என கருதிய விக்ரம் ,ஜானிடம் சொல்லிக் கொண்டு நூலகத்தில் இருந்து வெளியேறி விட்டான்.…

 

விக்ரமின் எதிர்பார்ப்பு பொய்த்து போகுமா..? பார்ப்போம்…

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏🙏🙏🙏 தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கவும் ☺️☺️☺️☺️

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top