அத்தியாயம் 7

தனிமையின் தொடக்கம்…

சென்னை செல்லும் கார்…

பாண்டியன் மாளிகையை விட்டு மெதுவாக வெளியேறியது.

ஜன்னல் வழியாக ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவில்லை ஆதவன்.

வாசலில் நின்றிருந்த அல்லி மட்டும்…

அந்தக் கார் கண்களை விட்டு மறையும் வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது கண்களில் கண்ணீர் நிரம்பியது.

“அல்லிம்மா…”

என்ற ரேணுகாவின் குரலில் சுயநினைவுக்கு வந்தாள்.

“உள்ளே வாம்மா…”

என்று தோளில் கை வைத்தார்.

அல்லி அமைதியாக தலையசைத்து உள்ளே சென்றாள்.

நேரம்…

காலை ஒன்பது மணியைத் தாண்டியது.

செல்வராஜ் பாண்டியன், கார்த்திக் பாண்டியன், அருள் பாண்டியன், அஜய் ஆகியோர் தொழில் விஷயமாக வெளியே கிளம்பினர்.

அபிஷேக்கும் கல்லூரிக்குப் புறப்பட்டான்.

பெரிய மாளிகை…

சில நிமிடங்களில் அமைதியாகிவிட்டது.

ரேணுகா சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

செல்வி பாண்டியன் பூஜை அறையில் இருந்தார்.

அல்லி மட்டும்…

ஹாலின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

புதிய வீடு…

புதிய மனிதர்கள்…

ஆனால்…

பேச யாருமில்லை.

அந்த நேரத்தில்…

வாசலில் இரண்டு கார்கள் வந்து நின்றன.

காரிலிருந்து இறங்கியவர்கள்…

ரேவதியும்…

கவிதாவும்…

“அம்மா…”

என்று அழைத்தபடி இருவரும் உள்ளே வந்தனர்.

“வாங்கம்மா…”

என்று செல்வி பாண்டியன் புன்னகையுடன் வரவேற்றார்.

இருவரின் பார்வையும்…

நேராக அல்லியின் மீது விழுந்தது.

ரேவதி உதட்டைச் சுளித்தாள்.

“இவதான் அந்தப் பொண்ணா?”

என்றாள்.

கவிதா ஏளனமாகச் சிரித்தாள்.

“அவசரமா கல்யாணம் பண்ணுன பொண்ணு இவளுதானா?”

அல்லி உடனே எழுந்து…

“வணக்கம் அத்தை…”

என்று மரியாதையுடன் கைகூப்பினாள்.

ரேவதி அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு…

“வணக்கம் மட்டும் சொன்னா போதுமா?”

“இந்த வீட்டுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கவும் தெரியணும்.”

என்றாள்.

அல்லி அமைதியாகத் தலைகுனிந்தாள்.

அந்த நேரத்தில் ரேணுகா வெளியே வந்தார்.

“அக்கா… இப்போதான் வீட்டுக்கு வந்திருக்கா. கொஞ்சம் அவளையும் புரிஞ்சுக்கோங்க.”

ரேவதி சிரித்தாள்.

“நாங்க தப்பா எதுவும் சொல்லல.”

“நம்ம வீட்டுப் பொண்ணு இருந்திருந்தா…”

“இப்படி அவசரமா வேற இடத்துல இருந்து பொண்ணு வரவேண்டிய அவசியம் வந்திருக்காது.”

அந்த வார்த்தை…

அல்லியின் இதயத்தை குத்தியது.

கவிதாவும் விடாமல்…

“அண்ணி…”

“இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது.”

“ரெண்டு நாள்ல இந்த வீட்டு சாவியும், கணக்கும் எல்லாம் கையில வாங்கிடுவாங்க.”

என்று கிண்டலாகப் பேசினாள்.

அல்லி பேசவில்லை.

அமைதியாக நின்றாள்.

அவள் கண்களில் கண்ணீர் திரண்டதைப் பார்த்த செல்வி பாண்டியன்…

“போதும்…”

என்று உறுதியான குரலில் சொன்னார்.

“அவ இன்னும் குழந்தை.”

“இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கா.”

“அவ மனசு கஷ்டப்படுற மாதிரி யாரும் பேசக்கூடாது.”

ரேவதியும் கவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வெளியில் அமைதியாக இருந்தாலும்…

அவர்களது மனதில் அல்லியின் மீது இருந்த வெறுப்பு மட்டும் குறையவில்லை.

அல்லி…

தன் கண்ணீரை யாரும் பார்க்காதபடி…

மெதுவாக தன் அறையை நோக்கி நடந்தாள்.

அந்த அறைக்குள் நுழைந்தவள்…

கதவை மூடிக்கொண்டு…

இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை…

அமைதியாக சிந்த ஆரம்பித்தாள்.

சென்னையின் பரபரப்பான சாலைகளைக் கடந்து…

கருப்பு நிற BMW கார் ஒரு பிரம்மாண்டமான அலுவலகத்தின் முன் வந்து நின்றது.

“பாண்டியன் குரூப்ஸ்.”

காரிலிருந்து இறங்கிய ஆதவனைப் பார்த்ததும்…

ஊழியர்கள் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.

“குட் மார்னிங் சார்.”

ஆதவன் தலையசைத்துவிட்டு…

நேராக தனது கேபினுக்குள் சென்றான்.

மேசை முழுவதும்…

கோப்புகள் குவிந்து கிடந்தன.

அவன் நாற்காலியில் அமர்ந்தவுடன்…

அவனது நண்பனும், Personal Assistant-உம் ஆன விக்ரம் உள்ளே வந்தான்.

“டேய்… ஒரு வாரமா ஆபீஸ்ல இல்ல. இங்க எல்லாரும் உன்னை தேடுறாங்க.”

ஆதவன் கோட்டை கழற்றிக்கொண்டு…

“வேலை சொல்லு விக்ரம்.”

என்றான்.

விக்ரம் சிரித்தான்.

“கல்யாணம் முடிஞ்ச மறுநாளே ஆபீஸ் வந்திருக்க. உன்னை மாதிரி ஆளை நான் பார்த்ததே இல்ல.”

ஆதவன் கோபமாக அவனைப் பார்த்தான்.

“Personal life பற்றி பேசாத.”

விக்ரமின் சிரிப்பு மறைந்தது.

“சரி… Business மட்டும் பேசுறேன்.”

அவன் ஒரு கோப்பை மேசையில் வைத்தான்.

“Rudra Groups மறுபடியும் நம்ம project-ஐ கைப்பற்ற try பண்ணுது.”

ஆதவனின் முகம் இறுகியது.

“அவன் இன்னும் திருந்தலையா?”

“இல்ல… இந்த முறை நம்ம company engineer-கிட்ட கூட பணம் கொடுத்து information வாங்க try பண்ணிருக்கான்.”

ஆதவன் நாற்காலியில் இருந்து எழுந்தான்.

அவனது கண்களில் கோபம் தெரிந்தது.

“என் company-யை யாராலும் தொட்டுக்கூட முடியாது.”

“அந்த Rudra-க்கு சொல்லு…”

“ஆதவன் பாண்டியன் இன்னும் தோற்கலை.”

விக்ரம் புன்னகைத்தான்.

“இதைத்தான் எதிர்பார்த்தேன்.”

அதே நேரத்தில்…

ஆதவனின் செல்போன் ஒலித்தது.

திரையில்…

“அம்மா”

என்ற பெயர் மின்னியது.

ஒரு நொடி…

அதைப் பார்த்தவன்…

அழைப்பை ஏற்றான்.

“சொல்லுங்க அம்மா.”

ரேணுகாவின் குரல் மெதுவாக ஒலித்தது.

“சாப்பிட்டியா ஆதவா?”

“ம்…”

“அல்லி…”

ரேணுகா சொல்ல வர…

“அம்மா… நான் meeting-ல இருக்கேன்.”

என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அவன் வெளியில் அமைதியாக இருந்தாலும்…

அவன் மனதில்…

திருமண நாள் நினைவுகள் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தன.

அவன் அவற்றை மறக்க…

வேலையில் தன்னை முழுவதும் மூழ்கடித்துக் கொண்டான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top